Bread of Life Church India

இயேசு கிறிஸ்துவை அப்பா என்று அழைக்கலாமா?

பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ் செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவரால் உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்” (எபி 2:11) என்று வேதம் கூறுகிறது. இந்த வசனத்தில் இயேசு கிறிஸ்துவை சகோதரரென்று வேதம் கூறுவதால் அவர் நமக்கு மூத்த சகோதரனாக இருக்கிறார். பிதாவை மட்டுமே நாம் அப்பா என்று அழைக்க வேண்டும்., இயேசு கிறிஸ்துவை அப்பா என்று அழைக்க கூடாது என்று சிலர் வாதிடுவது உண்டு.
வேதாகமத்தை வாசிக்கும் போது ஏதாவது ஒரு குறிப்பிட்டவசனங்களை மட்டும் வாசித்து மற்ற வசனங்களை தள்ளி விடுவது தற்கால வழக்கமாக மாறிவருகிறது. இதில் தேவ பிள்ளைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்விதமாக வாதிடுபவர்கள், இயேசு கிறிஸ்து சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதை மறந்து விடக்கூடாது.
இயேசு கிறிஸ்துவை குறித்து வேதம் கூறும் மற்ற வசனங்களையும் கவனிக்கலாம்.
1.       இயேசு கிறிஸ்து நல்ல மேய்ப்பன்
நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்” (யோவான் 10:11)
2.       இயேசு கிறிஸ்து நல்ல நண்பர்
இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” (யோவான் 15:10).
3.       இயேசு கிறிஸ்து மனுகுலத்தின் இரட்சகர்
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (லூக்கா 2:10).
பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்” (1 யோவான் 4:14).
4.       இயேசு கிறிஸ்து எஜமான்
எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரை கட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 12;37).
5.       இயேசு கிறிஸ்து வேலைக்காரர்
மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்” (மத் 20:28).
6.       இயேசு கிறிஸ்து ராஜாதி ராஜா
ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது” (வெளி 19:16).
7.       இயேசு கிறிஸ்து சர்வ வல்லமையுள்ள கர்த்தர்
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்” (வெளி 1:8).
இவ்விதமாக இயேசு கிறிஸ்துவை வேதாகமம் பல பரிமாணங்களில் நமக்கு வெளிப்படுத்துகிறது. இதில் ஏதாவது ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவைகளை உதாசீனப்படுத்த வேதாகமம் அனுமதி கொடுக்க வில்லை.
சர்வ வல்லமையுள்ள கர்த்தரை அப்பா என்று அழைக்க வேதம் எந்த தடையும் செய்ய வில்லை. “அந்தப்படி, திரும்பவும்பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்” (ரோமர் 8:15) என்று வேதம் கூறுகிறது. திரித்துவத்தில் பிதாவாக செயல்படும் தேவனை அப்பா என்று அழைக்க வேண்டும். குமாரனாக செயல்படுபவரை சகோதரன் என்று அழைக்க வேண்டும் என்றாலும் தேவத்துவத்தில் அவர்கள் ஒன்றாக இருப்பதால் அப்பா என்று அழைப்பதில் ஒரு தவறும் இல்லை.
இது போல் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை விட மரியாள் பெரியவர் என்பது போல போதிக்கப்படுகிறது. ஆகையால்தான் அநேக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தாய் இல்லாமல் பிள்ளையா? என்ற கேள்வியை கேட்பார்கள்.
இயேசு கிறிஸ்து  பூமியில் சரீரத்தில் இருந்த நாட்களில் மட்டுமே மரியாளுக்கு மகன். அவர் இப்பூமியில் மனிதனாக பிறப்பதற்கு முன்பாகவே இருக்கிற சர்வ வல்லமையுள்ள தேவன். இந்த அடிப்படையில் பார்க்கும் போது அவர் மரியாளுக்கும் தேவனாக இருக்கிறார். ஆகையால் தான்  மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்” (லூக்கா 1:38) என்று வேதம் கூறுகிறது.
ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்” (2 கொரி 5:16). ஆகவே இயேசு கிறிஸ்து சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்.

பார்வோனின் இருதயத்தை தேவன் ஏன் கடினமாக்கினார்?



 கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்” (யாத் 9:12). ஏன் பார்வோனின் இருதயத்தை தேவன்  கடினப்படுத்தினார் என்பதே சிலரின் கேள்வியாகும். ஒன்றை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். தேவன் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துவதற்கு முன்பே அவன் தன் இருதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான்.
 இஸ்ரவேல் மக்கள் கர்த்தருக்கு பண்டிகை கொண்டாடும் படி அவர்களை போக விட வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார். அதை பார்வோனிடத்தில் மோசே சொன்ன பொழுதுஅதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போக விடுவதில்லை என்றான்” (யாத் 5:2).
கர்த்தர் யார்? நான் கர்த்தரை அறியேன்; என்று பார்வோன் சொல்வதால் இஸ்ரவேலர்களின் தேவன் யார் என்பதை அறியாமல்  இந்த வார்த்தைகளை அவன் சொல்ல வில்லை. அவன் அப்படி சொன்னவைகளின் அர்த்தம் என்னவென்றால்கர்த்தர் சொன்னால் நான் அனுப்பி விட வேண்டுமா? அப்படி அவர் சொன்னதும் அனுப்புவதற்கு அவர் யார்? என்று தன் மனதைக் கடினப்படுத்தி அகந்தையாகவும், ஆணவமாகவும் கர்த்தருக்கு விரோதமாக பேசுகிறான்.
ஆகவேதான் பார்வோன், தான்  யார் என்பதை அறிந்து கொள்ளும் படி தேவன் அவனுடைய இருதயத்தை மேலும் கடினமாக்கினார்.   ஆணவத்தின் உச்சியில் இருந்த பார்வோனுக்கு தேவன் யார்? அவர் எப்படிப்பட்டவர்? அவருடைய அதிகாரம் என்ன? அவருடைய செயல்கள் எப்படிப்பட்டவைகள் என்பதை அவன் பார்க்கும்படிக்கே அவனுடைய இருதயத்தை மேலும் கடினப்படுத்தி கடினப்படுத்தி இயற்கையின் மேல் தனக்கு இருக்கும் அதிகாரத்தை பார்வோன் அறிந்து கொள்ளும் படி பத்து வாதைகளினால் அவனின் அதிகாரத்தையும், ஆணவமான பேச்சையும் சிதறடித்தார்.

தேவன் பொய்யின் ஆவியை அனுப்பியது ஏன்?



“கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளின் வாயிலே கட்டளையிட்டார்என்று 2 நாளா 18:22ல்   வாசிக்கிறோம் நன்மைகளை மட்டுமே கொடுக்கும் தேவன் பொய்யின் ஆவியை அனுப்பியது ஏன்? இது 2 நாளாகமம் 18ம் அதிகாரத்தை வாசிக்கும் பொழுது சிலருக்கு எழும்பும் கேள்வியாக இருக்கலாம். இந்த அதிகாரத்தில் உள்ள சம்பவத்தின் மூலமாக தேவன் என்ன செய்தியை தமது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார் என்பதை இந்த வேத பகுதியை நன்றாக வாசித்து தியானித்து அறிந்து கொள்வோம்.
ஒரு சமயம் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப், சீரியாவிற்கு விரோதமாக கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு யுத்தத்திற்கு யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தையும் அழைக்கிறான். யோசபாத்தும் வருகிறேன் என்று சம்மதிக்கிறான். ஆனாலும்யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்” (2 நாளா 18:4) உடனே இஸ்ரவேலின் ராஜா ஆகாப் தனக்கு சாதகமாக தீர்க்கதரிசனம் சொல்லும் நானூறு தீர்க்கதரிசிகளை அழைத்து விசாரிக்கிறான். அவர்கள் அனைவரும்நீங்கள் போகலாம் தேவன் உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்கிறார்கள்.
அந்த நானூறு பேர் ஒரே விதமாக போகலாம் என்று சொன்னாலும் யோசபாத்திற்கோ அதில் திருப்தி இல்லை. ஆகையால்யோசபாத்: நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான்” (2 நாளா 18:6). இவ்விதமாக யோசபாத் கேட்பதில் இருந்து ஒன்றை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். கர்த்தருடைய ஆவியினால் நடத்தப்படுகிற மனிதன் பொய்களை நம்ப மாட்டான்.
ஆனால் இஸ்ரவேலின் ராஜா ஆகாப் தேவனுடைய வார்த்தைகளை மீறி பொல்லாங்கான செயல்களில் அதிகமாக ஈடுபட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை அசட்டை செய்து, தனக்கும் தனது செயல்களுக்கும் சாதகமான வார்த்தைகளை பேசும் நபர்களை உடன் வைத்துக்கொண்டிருக்கிறான்.

கொடுத்தலின் ஆசீர்வாதம்

யாரும் சொல்லிக்கொடுக்காமல் தேவனுக்கு முதன்மையானதையும், முக்கியமானதையும் கொடுக்க வேண்டும் என்று அறிந்து கொடுத்த ஆபேல் தேவனால் சாட்சி பெற்றான்.

வரமாக பெற்ற ஒரே மகனை எந்த கேள்வியும் கேட்காமல் தேவனுக்கு கொடுக்க தயாரான ஆபிரகாம் வானத்து நட்சத்திரங்களை போலவும், கடற்கரை மணலைப்போலவும் சந்ததிகளை பெற்றான்.

கர்த்தர் தான் கர்ப்பத்தை அடைத்து வைத்துள்ளார் என்பதை அறியாமல் தனக்கொரு பிள்ளையை கொடுத்தால் அதை தேவனுக்கே கொடுப்பேன் என்று சொல்லில் மட்டுமல்ல , சொன்னபடி தேவன் கொடுத்த தும் தேவனுக்கே கொடுத்த அன்னாள் மேலும்  ஐந்து பிள்ளைகளை பெற்றுக் கொண்டாள்.

தனக்கும் மகனுக்கும் வாழ்வதற்கு உணவில்லை இருப்பதை உண்டு சாகலாம் என்று முடிவெடுத்த நிலையில் தேவ மனிதன் இருப்பதில்  முதலில் எனக்கு கொடு என்று கேட்டதும் இருப்பதையும் தேவனுக்கு கொடுத்த சாறிபாத் விதவை தேசமே பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட போதும், பஞ்ச காலம் முழுவதும் பசி இல்லாமல் பசுமையாக வாழ்ந்து, வியாதி பட்டு இறந்த மகனையும் அற்புதமாக திரும்ப பெற்றுக் கொண்டாள்.

ஐசுவரியவான்கள் எல்லாம் தங்கள் பரிபூரணத்தில் இருந்து கொடுத்த போது, தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தேவனுக்கு கொடுத்த ஏழை விதவை இயேசு கிறிஸ்துவினால் கூர்ந்து  கவனிக்கப்பட்டு, பாராட்டுப்பெற்றாள்.


கேட்டுப்பார் தேவனின் அன்பு தெரியும்

கொடுத்துப்பார் நீ தேவன் மேல் வைத்துள்ள அன்பு வெளிப்படும்

நீங்கள் கர்த்தருக்காக கொடுத்தவைகள் கணக்கில் உண்டு. மிகுதியாக உங்களுக்கு கொடுத்து கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

*சாட்சியாக மாற்றுவார்*




எல்லாம் பொதுவில்



பசியால் மிகவும் களைத்து போன நிலையில் இருந்த ஒரு மனிதன், ஒரு திருச்சபையைக் கண்டு, அதற்குள்ளே சென்று அங்கு இருந்த போதகரிடம்ஐயா மிகுந்த பசியாக இருக்கிறது, சாப்பிடுவதற்கு ஏதாவது தருகிறீர்களா?” என்று கேட்டான்.
அந்த மனிதனின் நிலையை கண்ட போதகர்  உடனடியாக தங்களிடம் இருந்த உணவைக் கொடுத்து அவன் பசியை ஆற்றினார். இரவு வெகு நேரம் சென்று விட்டபடியினால், அந்த மனிதன்ஐயா நீங்கள் அனுமதி கொடுத்தால் நான் இன்று இரவு மட்டும் இங்கு தங்கிக்கொள்கிறேன்என்று அனுமதி கேட்டான்.

வழிப்போக்கன்



நான் வசிக்கும்படி எனது தந்தை எனக்காக ஒரு வீட்டை கட்டி, அதில் என்னை குடியேற்றினார். எனது வீட்டில் நான் வசித்து வந்த நாட்களில் ஒருநாள் ஒரு நபர் என் வீட்டு கதவை தட்டி, உங்கள் வீட்டில் எனக்கு ஒரு சிறிய அறையை கொடுங்கள், நான் உங்களுக்கு வேண்டிய பணங்களை கொடுக்கிறேன். நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அதை உங்களுக்கு நான் செய்து கொடுப்பேன். எப்பொழுதும் உங்களுக்கு உதவியாக இருப்பேன் என்று பணத்தைக் காண்பித்து, ஆசை வார்த்தைகளை பேசியதில் மயங்கி எனது வீட்டில் ஒரு சிறிய அறையை ஒதுக்கி அந்த நபரை தங்க வைத்தேன்.
ஆரம்பத்தில் நான் என் மனதில் நினைக்கிற எந்த காரியமானாலும் அதை எனக்கு உடனே செய்து கொடுத்தான். எனக்கு மிகவும் இன்பமாக இருந்தது. இப்படி தன் பணத்தையும் கொடுத்து, நான் விரும்புகிற எல்லாவற்றையும் எனக்காக ஓடி ஓடி ஒரு வேலைக்காரனைப்போல உதவி செய்து வந்த நபரை பார்த்து பெருமிதம் கொண்டேன்.
நாட்கள் சென்றன. அந்த நபர் எனது வீட்டின் எல்லா அறைகளையும் என் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்த ஆரம்பித்தான். நாட்கள் செல்ல செல்ல எனது பேச்சை மதிக்காமல் அவன் தன் இஷ்டம் போல் எல்லாவற்றையும் செய்ய ஆரம்பித்து விட்டான்.

"ஜீவ அப்பம்'' (மார்ச் 2017) மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு,  ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக,  விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.


எல்லோரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது.  இந்த மாத ( மார்ச்   2017) ஜீவ அப்பம் மாத இதழை  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.

எந்த சரீரத்தில் இருப்பார்கள்?

ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக் கொண்டார்” ( ஆதி 5:24). வேதாகமத்தில் முதன் முதலாக மரணத்தைக் காணாமல் எடுத்துக் கொள்ளப்பட்ட மனிதன்ஏனோக்”.
இதை அடுத்து பழைய ஏற்பாடு காலங்களில்இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்  (2 இராஜா 2:11) என்று எலியாவைக்குறித்தும் வேதம் கூறுகிறது.