Bread of Life Church India

இதுவே அடையாளம்

 ஆடு மேய்க்கிறவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நற்செய்தியை அறிவித்து தேவ தூதன்.``பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்'' <லூக்கா 2:12>.
    இயேசு கிறிஸ்து பிறந்திருக்கிறார் என்பதற்கு ஆடு மேய்ப்பவர்களுக்கு அடையாளம் கொடுக்கப்பட்டது. அவர் எந்த ஊரிலே, எந்த இடத்திலே எப்படி இருக்கிறார் என்பதும் அவர்களுக்கு துல்ஙியமாக அறிவிக்கப்பட்டது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தேவனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்து இந்த பூமியிலே வந்த செய்தி மனித குலத்திற்கே நல்ல செய்தி.
இந்த நல்ல செய்தியை கேட்பது மட்டும் அல்ல, வாழ்க்கையில் எல்லோரும்  பெற்றுக் கொள்ளவேண்டும். இதை எல்லா மனிதருக்கும் அறிவிக்க வேண்டும். என்பதே தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.

வெற்றியின் இரகசியம்

   
    கிறிஸ்துவுக்குள் நாம் வாழும் பொழுது தேவன் நமக்கு வெற்றியை கொடுக்கிறார். ஆனால் நாம் தான் இந்த வெற்றி வாழ்க்கையை  அனுதினமும் நம்முடைய வாழ்வில் நடைமுறைப் படுத்த வேண்டும்.
    அதற்கு தேவனுடைய வசனங்கள் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது.
    வெற்றி வாழ்க்கை சாத்தியமே, என்ற தலைப்பில் செயல் படுத்த வேண்டிய அவசியம் என்ற குறிப்பின் கீழ்  இப்போது நாம் தியானிக்கும் பொருள். அர்ப்பணிப்பின் ஆழம்.
    கிறிஸ்துவுக்குள்ளாக நம்மை எந்த அளவுக்கு அர்ப்பணிக்கிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய வெற்றி வாழ்க்கை சாத்தியமாகும்.
    அர்ப்பணிப்பின் அழம் அதிகமாகும் போது, ஆசீர்வாதங்களின் அளவும் அதிகமாகும். இதுதான் வெற்றி வாழ்வின் இரகசியம்.
    இதைக்குறித்து நாம் விரிவாக வேதாகம வசனங்களின் அடைப்படையில் தியானிப்போம்.
    லூக்கா 17ம் அதிகாரம், 7முதல் 10 வரை உள்ள வேத பகுதியை நாம் வாசித்துப் பார்க்கும் போது. உவமையாக ஒரு சம்பவத்தை இயேசு கிறிஸ்து  விவரித்துக் காண்பிக்கிறார்.

யார் மாதிரி?



ஒரு சமயம் ஊழியத்திற்கு தயாராகஇருந்த வாலிபர்களிடத்தில் “நீங்கள் எப்படி, யார் மாதிரி ஊழியம் செய்வீர்கள்’’ அதை நீங்கள் ஒரு பேப்பரில் தனித்தனியாக எழுதி கொடுக்க வேண்டும் என்று கேட்ட போது,  ஒவ்வொருவரும்  “நான் இவரைப்போல ஊழியம் செய்ய விரும்புகிறேன். அவரைப்போல ஊழியம் செய்ய விரும்புகிறேன்’’ என்று, தங்களுக்குத் தெரிந்த எல்லா பிரபலமான ஊழியர்களின் பெயரையும் குறிப்பிட்டு எழுதிக் கொடுத்தனர்.
அதே போல இன்றும் ஊழியம் என்றதும் பவுல் அப்போஸ்தலர் மட்டும்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வருகிறார்.
நல்லதுதான்.
அதையும் தாண்டி சிலர், பேதுரு, அல்லது யோவான் என்று வேதாகமத்தில் பிரபலமாக அறியப்பட்டிருக்கும் அப்போஸ்தலர்களின் பெயரை உச்சரிப்பது உண்டு.

உன்னால் முடியும்


கர்த்தர் நமக்குக் கொடுத்த அதிகாரத்தை நினைவுபடுத்தி, அதிகாரம் உள்ளவர்களாக நடந்துகொள்ளவும், தேவனிடத்தில் பெற்ற அதிகாரத்தைச் செயல்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும் என்றும்  தம்முடைய வார்த்தையின் மூலம் பேச விரும்புகிறார். கர்த்தருடைய இந்த வார்த்தைகளைக் கருத்துடனும், ஜெபத்துடனும் வாசித்துத் தேவ ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.
 இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது’’ {லூக்கா 10:19} என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவருடைய வழியில் நடக்கும் தேவ பிள்ளைக்ளுக்கு விசேஷமான அதிகாரத்தை இயேசு கிறிஸ்து கொடுத்திருக்கிறார்.
அது என்னவென்றால் சத்துருவின் சகல வல்லமைகளையும் மேற்கொள்ளக்கூடிய வல்லமை. மனிதர்களாயிருக்கிற நம்முடைய வாழ்க்கையில் கண்ணுக்கு மறைவாகப் பல விதமான போராட்டங்களைச் சந்தித்து வருகிறோம், இந்தப் போராட்டங்களுக்கு எல்லாம் காரணக் கர்த்தாவாயிருப்பது, சத்துரு என்று அழைக்கப்படும் பிசாசு.
இந்தச் சத்துருவினுடைய தந்திரங்களை முதலாவது தேவனுடைய பிள்ளைகள் அறிந்துகொள்ளவேண்டும். அதைவிட முக முக்கியமானது சத்துருவினுடைய வல்லமைகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

உண்மை வழி

மதங்களை சுமப்பது மனிதனுக்கு என்றுமே சுமைதான். மதங்கள் ஒன்றுக்கும் உதவாது.

உலகின் எந்த மூலையிலும் வாழும் எந்த மனிதனும்  உறவுகளே, அதை எந்த வகையிலும் பிரித்து பார்ப்பது மனிதனின் அறியாமையையே வெளிக்காட்டும்.

மனிதர் தங்கள் அடையாளங்களை பதிவு செய்ய முயல்கிறார்கள்.மனித மனங்களில் இருக்கும் அறியாமை இருளே கடந்த கால அடையாளங்கள்.

வெளிச்சத்தை பதிவு செய்து இருளை விலக்க முயல்கிறவர்களை மதவாதிகள் எதிர்ப்பது ஒன்றும் புதிய வரலாறு அல்லவே.

"ஜீவ அப்பம்'' (நவம்பர் 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது. 


எல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது.  இந்த மாத ( நவம்பர்  2014) ஜீவ அப்பம் மாத இதழை  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.

தேவ கிருபையால், ஆவியானவரின் ஒத்தாசையுடன  எழுதப்பட்டிருக்கும்  தேவ செய்திகள் கட்டாயம் படிக்கும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.


தவறாமல் பதிவிறக்கி படியுங்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
 
மேலும் இந்த மாத இதழைக்குறித்து  உங்கள் கருத்துக்களை கீழே பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.
 
Download link     

click-Jeeva Appam November 2014
                                                                                                                                  6 MB


நமது ஜீவ அப்பம் மாத இதழ் உங்கள் வீடு தேடி வரவேண்டுமானால், உங்களின் விலாசத்தை jeevaappam@gmail.com என்ற மின் அஞ்சல் மூலமாக  அனுப்பலாம். அல்லது, +91 9791047107 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 


உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்ய உங்கள் முக நூல் ( facebook)  பக்கத்தில் Share செய்யுங்கள்

"ஜீவ அப்பம்'' (அக்டோபர் 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது. 
எல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது.  இந்த மாத ( அக்டோபர்  2014) ஜீவ அப்பம் மாத இதழை  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.

மனந்திறந்து உங்களுடன்


அன்பு ஜீவ அப்பம் இணைய வாசகர்களே, உங்கள் அனைவருக்கும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
 நமது ஜீவ அப்பம் வலைபூ தேவனுடைய கிருபையினால், தொடர்ந்து வருகிறது. இந்த வலைபூவின் மூலமாக இணையத்தில்  ஆவிக்குரிய சத்தியங்களை எழுதவும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவிக்கவும், இணையத்தின் வழியாக தேவனுடைய ஊழியங்கள் செய்து வருகிறோம்,.

சவாலுக்கு சவால்



வாழ்க்கையில் போராட்டம் என்பது தவிர்க்க முடியாதது. நம்முடைய வாழ்க்கையில் வருகின்ற போராட்டங்கள் நம்மைத் தேவனோடு இன்னும் ஐக்கியப்படவும், நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடையவுமே தேவன் அனுமதிக்கிறார். ஆனால் போராட்டமான சூழ்நிலையில் நாம் சோர்ந்து போகிறோம், கலங்குகிறோம். என்ன செய்வது என்று தெரியாமல் கவலைப்படுகிறோம்.
நம்முடைய வாழ்வில் போராட்டங்களை அனுமதிக்கிற தேவன் நம்மைத் தனியாக விட்டு விட்டு வேடிக்கை பார்க்கிறவர் அல்ல, அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நமக்கு உதவி செய்து, நம்மை உயர்த்துகிறவராக இருக்கிறார்.

வெற்றி வாழ்வின் துவக்கம்




வெற்றி வாழ்க்கை சாத்தியமே என்ற தலைப்பில் தொடர்ந்து தேவனுடைய வார்த்தையைத் தியானித்து வருகிறோம். இதில் செயல்படுத்த வேண்டிய அவசியம் என்ற பகுதியில்

2. பின்பற்றுதலில் உறுதி

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.
ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள் (கொலோசெயர் 3:1-4)
மேலான வாழ்க்கை என்றதும், வெற்றி என்றதும் வறுமையை ஜெயித்த, பணம்படைத்தவர்களும், உயர் பதவியில் இருப்பவர்களும், வசதி வாய்ப்போடு இருப்பவர்களுமே வெற்றிப் பெற்றவர்கள் என்று நினைத்துக்கொள்கின்றோம்.

சுவடுகள் (மூன்று) ஊழியத்தின் ஆரம்பம்


இருபத்து மூன்று வயதே நிரம்பிய வாலிப நாட்கள். ஊழியம் என்றால் என்ன? ஊழியத்தின் தன்மை என்ன என்று எதுவும் தெரியாத நிலையில் ஊழியத்தின் அழைப்பு.
ஆண்டவர் ஊழியத்திற்கு அழைத்திருக்கிறார் என்று ஒருவரிடமும் சொல்ல முடியாது. ஏன் என்றால் என்னைச் சுற்றி இருந்த உறவுகளுக்கு ஊழியம் என்றால் என்ன என்று தெரிய வாய்ப்பே இல்லை.
இந்தக் காலத்தில் ஒரு ஊழியக்காரனின் மகன் ஊழியத்திற்கு வருவதும், ஊழியத்தில் நிற்பதும் எளிது. அல்லது ஊழிய பிண்ணனி கொண்ட குடும்பத்தில் பிறந்து, ஊழியத்தில் வருவதும், ஊழியத்தில் நிற்பதும் எளிது. அப்படிப்பட்ட வாய்ப்பு இல்லை என்றாலும், நல்ல வசதி வாய்ப்புடன், பெயர் புகழுடன் செல்வாக்காய் இருந்தால் ஒருவேளை ஊழியத்தில் வருவதும், ஊழியத்தில் நிற்பதும் எளிதாக இருக்கலாம்.
ஆனால் இவைகள் எதுவும் இல்லாமல், ஆண்டவரின் அழைப்பை மட்டும் வைத்துக்கொண்டு, இந்தக் காலக் கட்டத்தில் ஊழியத்திற்கு வருவது சவாலாகும். இந்தச் சவாலை மனதுக்குள்ளாக ஏற்றுக்கொண்டே இந்த ஊழிய பயணத்தைத் தொடர ஆரம்பித்தேன்.

"ஜீவ அப்பம்'' (செப்டம்பர் 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது. 


எல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது.  இந்த மாத  (செப்டம்பர் 2014) ஜீவ அப்பம் மாத இதழை  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.
தேவ கிருபையால், ஆவியானவரின் ஒத்தாசையுடன  எழுதப்பட்டிருக்கும்  தேவ செய்திகள் கட்டாயம் படிக்கும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.

எந்த நாள்...ஓய்வு நாள் ?

தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்’’ (ஆதி 2:2,3) என்றும் ஆறு நாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் (யாத் 31:17) என்றும் வேதாகமத்தில் வாசிக்கிறோம்.

முடிவல்ல...துவக்கம்




பிரியமானவர்களே, தெய்வீக அன்பும், தேவ கிருபையுமே நம்மை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த மாதமும் தேவனுடைய ஆசீர்வாதமான வார்த்தையின்படி கர்த்தர் உங்களை வழிநடத்தப்போகிறார்.
இந்த மாதத்தின் விசேஷித்த ஆசீர்வாத வசனம் இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?’’ (எரேமியா 32:27).
இந்த வசனத்தை நாம் கவனித்து வாசித்தால் தேவன் நம்மிடத்தில் கேட்கும் கேள்வியை நம்மால் புரிந்து கொள்ள முடியும். நாம் பல நேரங்களில் நம்முடைய கஷ்டங்களையும், நம்முடைய வேதனைகளையும் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறோம்.

எது சரி ?


 “அக்கா அக்கா’’ என்று கூப்பிட்டவாரு கதவை தட்டினாள் வித்யா.
“இதோ வந்து விட்டேன்’’ என்று சொல்லியபடியே கதவை திறந்து “யாரு’’ என்றபடி வெளியே வந்தாள் கவிதா.
“நான்தாங்கா வித்யா’’
வித்யாவா, என்ன வித்யா ரொம்ப வேகமா வந்திருக்க? என்ன விஷயம். உள்ளே வா’’ என்று கதவை முழுவதுமாக திறக்க “வேகம் எல்லாம் இல்ல, வீடு பூட்டி இருந்துச்சு, அதான் சத்தமா கூப்பிட்டு கதவை தட்டினேங்கா’’ என்றபடியே உள்ளே சென்றாள் வித்யா.
 “எப்படி இருக்கீங்கக்கா’’ என்று கேட்டபடியே சோபாவில் அமர்ந்தாள்.
“ம் நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க? என்ன இரண்டு மூன்றுநாளா வீடு பூட்டி இருந்தது. ஊருக்கு போயிருந்தீயா?’’

"ஜீவ அப்பம்'' (ஜூலை 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது. 


எல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது.  இந்த மாத  (ஜூலை 2014) ஜீவ அப்பம் மாத இதழை  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.
தேவ கிருபையால், ஆவியானவரின் ஒத்தாசையுடன  எழுதப்பட்டிருக்கும்  தேவ செய்திகள் கட்டாயம் படிக்கும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.

அவனா இவன் !



எருசலேம் தேவாலயத்தை நோக்கி திரளான மக்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். இயேசுவும் அவருடைய சீஷர்களும் தேவாலயத்திற்குச் செல்ல திரளான மக்கள் கூட்டம் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தன.
அன்று ஓய்வு நாளாக இருந்தபடியால், மக்கள் தேவாலயத்திற்கு அதிகமாக வந்து கொண்டிருந்தனர். வழியோரங்களில் சில பிச்சைக்காரர்கள் அமர்ந்திருந்தனர். அப்படி அமர்ந்திருந்தவர்களில், பிறந்தது முதல் குருடனாக இருந்த ஒரு மனிதனும் சத்தமாகப் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
'சத்தமாகப் பிச்சையெடுப்பவர் யார்' என இயேசு நின்று பார்த்தார். இயேசுவின் கவனம் அவன் மேல் படுவதைக் கண்ட சீஷர்கள், அவரிடம்போதகரே, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமா? அல்லது இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமா?’’ என்று கேட்டனர்.

மதங்களும் கிறிஸ்தவமும்



கடவுள் நம்பிக்கை கொண்டவர்களையும், கடவுள் வழிபாடு செய்கிறவர்களையும் ஆன்மீகவாதிகள் என்று அழைக்கிறார்கள். உலகமெங்கும் மதங்கள் ஏராளமாக உள்ளன. எல்லாம் கொள்கை ரீதியிலும், வழிபாடு மாறுபாடுகளினாலும் வித்தியாசப்படுகிறது.
கடவுள் ஒருவரே என்று, கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் சொன்னாலும் பெயரிலும், வழிபாடுகளிலும் கடவுளை அறிந்து கொள்ளும் அறிவிலும் அதிகப்படியான வித்தியாசங்கள் கொண்ட அநேக பிரிவுகளும் பிரிவினைகளும் உலகம் முழுவதிலும் உண்டு.

சுவடுகள் (இரண்டு) எழுத்தின் ஆரம்பம்




என் எண்ணங்களை பின் நோக்கி செலுத்திய போது, மறக்காமல் இருக்கும் சில சுவடுகள்.
மிகவும் பின்தங்கிய கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, அதிகம் படிக்காத இளம் வாலிபனாய் வலம் வந்த நாட்கள், பேச பிடிக்கும் ஆனால் பேச தெரியாது. அந்த கோர்வை வராது. மனதில் சிந்திப்பதை வார்த்தையில் வடிக்கும் கலை தெரியாது.
எல்லாவற்றிலும் ஜீரோ. இதுதான்  என்னைக்குறித்த எனது எண்ணம். 20 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இருந்து திருவிழாவிற்காக ஊருக்கு சென்றிருந்த ஒருநாள் மாலை வேளை, கத்தோலிக்க தேவாலயம் முன்  ஊர் மக்கள் கூடியிருக்க, 13 நாள் அந்தோணியார் கோவில் திருவிழா முடிந்து வெளிஊரில் இருந்து வந்த பாதிரியாரை வாழ்த்தி வழியனுப்ப மாலையுடன்  காத்திருந்த வேளை, ஒருசில வார்த்தை வாழ்த்தி பேச வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

கானான் சபிக்கப்பட்டது ஏன்?



வேதாகமத்தை வாசிக்கும் போது நமக்குள்ளாக கேள்விகள் எழுவது இயற்கையே, கேள்விகள் வந்தால்தான் நாம் சரியாக வேதாகமத்தை கவனித்து வாசிக்கிறோம் என்று பொருள். கேள்விகள் வரலாம், அதே வேளையில் சந்தேகம் வரக்கூடாது. தவறுதலாக புரிந்து கொள்ளக்கூடாது. தனக்கு புரியாதவைகளை இல்லை என்றும் சொல்லக் கூடாது.
வெள்ளத்தினால் உலகம் அழிந்த பிறகு, புதிய பூமியில் முதல் குடும்பமான நோவாவின் குடும்பத்தில் நடந்த சம்பவத்தை குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

எனக்கு எந்த ஆபத்தும் இல்லை



 அழகிய பண்ணை, வீடு சுற்றிலும் இயற்கை வளம் கொஞ்சும் அழகிய வயல்கள். அந்த பண்ணை வீட்டில் வெகு நாட்களாக உலாவி வந்த ஒரு எலி சமையலறையில் எலிபொறியைப் பார்த்துவிட்டது.    

             "ஆகா நமக்காகத்தான் இதை வைத்திருக்கிறார்கள். இதில் மாட்டிக்கொண்டுவிட்டால் என்ன செய்வது?" என்ற பயத்தில் ஓடிச் சென்று தனக்கு நெருங்கிய நண்பனான அந்தப் பண்ணையில் இருந்த கோழியிடம் சென்று மூச்சிறைக்க நின்றது.
      “என்ன எலியாரே, என்ன சங்கதி, இவ்வளவு வேகமாக ஓடி வந்து மூச்சிறைக்க வந்து நிற்கிறீர்’’ என்று கோழி கேட்டது.
ஓடி வந்த களைப்புடனே மூச்சிறைக்க "சமையலறையில் ஒரு எலி பொறி இருக்கிறது, சமையலறையில் ஒரு எலி பொறி இருக்கிறது’’ என்று திக்கி தினறி சொல்லியது.    அதைக் கேட்ட கோழி “ஆஹா எலியாரே இனி உமது பாடு திண்டாட்டம்தான் போல’’ என்று எந்த வருத்தமும் இல்லாமல் சொல்லியது. “என்ன கோழியாரே இவ்வளவு பெரிய விசயத்தை சொல்லுகிறேன், நீங்க மிக சாதாரணமாக பேசுகிறீர்களே’’ என்று மிகவும் பட படப்புடன் பேசியது.

சீர்திருத்தம் எங்கிருந்து....

இக்காலத்தில் சீர்திருத்தம் பேசுகிறவர்களுக்கோ, சீர்திருத்தவாதிகளுக்கோ பஞ்சமில்லை. இத்தனை சீர்திருத்தவாதிகள் இருந்தும், சீர்திருத்தம் எங்கே? என்று தேவன் கேட்கும் கேள்வி காதில் விழுகிறதா?
வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவானாலும், பவுலானாலும், மற்ற அப்போஸ்தலர்களானாலும், சீர்திருத்தம் பேசுகிறவர்களாக மட்டும் இல்லை. சீராக வாழ்ந்தார்கள்.
இயேசுவைப்போல் சாட்டை எடுக்க இன்று அநேகர் தயார். இயேசுவைப்போல் வாழ அவர்கள் தயாராக இல்லை. பவுலைப்போல் பிரம்பை எடுக்க எல்லோரும் தயார். ஆனால் பவுலைப்போல் வாழ அவர்களுக்கு விருப்பம் இல்லை.

சுவடுகள் (ஒன்று) இரட்சிப்பின் அனுபவம்



சென்னை திருவொற்றியூர் பகுதியில் வசித்து வரும் லூர்துராஜ் என்கிற நான் பிறப்பால் ரோமன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவன், சிறு வயதிலிருந்தே இயேசுகிறிஸ்துவை விட புனிதர்களை வணங்கி வழிபட்டதுதான் அதிகமாக இருக்கும் ஏனென்றால் எனக்கு அதைத்தான் சொல்லிக் கொடுத்து வளர்த்தார்கள், எங்கள் ஊரில் உள்ளதும் அந்தோணியார் கோயில்தான்
இவ்விதமாக வளர்ந்த நான் கோவில்பட்டி அருகே உள்ள செவல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவன். 1998 ம் வருடம் ஊரிலிருந்து சென்னைக்கு வந்ததினால் திருவொற்றியூரில் உள்ள ஒரு பெந்தெகொஸ்தே சபைக்கு முதன் முதலாக செல்ல ஆரம்பித்தேன், தொடர்ந்து ஒருவருடகாலம் அந்த சபையின் ஆராதனைகளில் கலந்து கொண்டேன் அந்த நாட்களிலேயே பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் பெற்றுக் கொண்டேன்

வாழ்க்கையின் மாற்றத்திற்கு அவசியம்



பிரியமானவர்களே, இந்தமாதத்தில் கர்த்தர் நமக்கு தரும் விசேஷமான ஆசீர்வாதமான தேவனுடைய வார்த்தை “பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது’’ (லூக்கா 1:13). கடந்த நாட்களில் நீங்கள் எதைக்குறித்து எல்லாம் வேண்டுதல் செய்து கொண்டிருந்தீர்களோ, அவைகள் எல்லாவற்றிற்கும் தேவன் பதில் கொடுக்கப் போகிறார்.
மேலே நாம் வாசித்த வேதபகுதியில் சகரியாவிடம் தேவ தூதன் தரிசனமாகி கர்த்தருடைய வார்த்தையை அறிவிக்கிறான், ஆனால் சகரியாவோ அதை ஏற்றுக்கொள்ள தயங்குகிறான். ஏன் என்றால் பல வருடங்களுக்கு முன்பாக தான் வேண்டுதல் செய்தவைகளை சகரியாவே மறந்து விட்டான். ஆகையால்தான் “சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்’’ என்று கேட்கிறான்.
இன்றைக்கும் அநேகர் இப்படிதான் இருக்கிறார்கள். தாங்கள் வேண்டுதல் செய்தவைகளை மறந்து விடுகிறார்கள். ஆனால் தேவன் நாம் வேண்டுதல் செய்தவைகளை மறக்கிறவர் அல்ல, அவர் கட்டாயம் பதில் கொடுக்கிறவராக இருக்கிறார். எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் சரி, தேவன் நமது வேண்டுதலுக்கு பதில் கொடுக்கிறார் என்பதைத்தான் இந்த வேத பகுதி நமக்கு விளக்கி காண்பிக்கிறது.

பாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் , என்று அழைக்கலாமா?


கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறவர்கள் பாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் என்று போட்டுக்கொள்வது தவறு என்பது போல் இக்காலத்தில் சிலர் பேசுவது வேதாகமத்திற்கு எதிராகவும், உறுதியில்லாத விசுவாச மக்களை, திருச்சபை விசுவாசத்தை விட்டு விலகச் செய்வது போலும் இருக்கிறது.
இக்காலத்தில் சிலர் தவறாக  பாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் என்று தங்களை தாங்களே அழைத்துக்கொள்கிறார்கள், தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக வேதாகமம் சொல்லியிருக்கும் பொறுப்புக்களை இல்லை என்று சொல்லி விட முடியுமா?

"ஜீவ அப்பம்'' (ஜீன் 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது. 

வேதாகமத்தில் “திரித்துவம்’’ உள்ளதா?


வேதாகமத்தில் திரித்துவ உபதேசம் மிகவும் முக்கியமான உபதேசமாகும். திரித்துவத்தை சரியாக விளங்கி கொள்ளா விட்டால், புரிந்து கொள்ளாவிட்டால் துர் உபதேசக்காரர்களின் வலையில் விழுந்து விசுவாச வாழ்வை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
திரித்துவ உபதேசம் இடையில் வந்தது அல்ல., வேதாகமத்தோடு கலந்தது. ஒரே நித்திய தேவன் திரித்துவமாக எப்படி செயல்படுகிறார் என்பதை வேதாகமம் அற்புதமாக விளக்கி காண்பிக்கிறது.
திரித்துவத்தை மறுதலிக்கப் புறப்படும் கள்ளர்களின் நோக்கம் இயேசு கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலிக்க வைப்பதேயாகும். இது பிசாசின் மற்றுமொரு தந்திரம்.

எதிரிக்கு சவால்

அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்’’ என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 1:19).

தேவ குமாரர்கள் யார் ?



தேவ குமாரர், மனுஷ குமாரத்திகள் யார் என்ற கேள்விகள் பல நூற்றாண்டுகாலங்களாக விவாதத்திற்கு உரிய பகுதி. வேதாகமத்தில் எந்த வசனமும், எந்த வேத பகுதியும் நம்முடைய வாழ்வில் விசுவாசத்தை வளர்க்கவும், கர்த்தருக்குள் வளரவுமே எழுதப்பட்டுள்ளது.

"ஜீவ அப்பம்'' (மே 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது. 

மொழி பிரிந்த வரலாறு



காடுகள் மலைகள் என எங்கும் சிதறிச் சென்று, அவற்றைக் குடியிருப்புக்களாக மாற்றி, புதிய பூமியில் மனிதர்கள் பரவ ஆரம்பித்தனர். மனிதர்களின் எண்ணிக்கை பூமியில் பெருகப் பெருக பட்டணங்களைக் கட்டுவதிலும், தங்கள் குடியிருப்புக்களை கவனிப்பதிலும் அதிக கவனத்தைச் செலுத்தியதால், மக்களுக்கு கடவுளைக் குறித்த எண்ணங்கள் குறைய ஆரம்பித்தன.
நோவாவின் இரண்டாம் மகன் சேமுடைய வழி மரபில் வந்த ஏபேர் என்பவனுக்கு  இரு புதல்வர் பிறந்தனர்; அவர்களில்  ஒருவனுக்கு  பேலேகு என்று பெயர் வைத்தான்.  ன் என்றால் அவன் பிறந்த காலத்தில்தான் மக்கள் தேசம் வாரியாக பிரிந்தனர். தேசங்களுக்குள் எல்லைகள் அமைக்கப்பட்டு, ராஜ்யங்கள் உண்டாயின.

வெற்றி வாழ்க்கையின் அவசியம்



வெற்றி வாழ்க்கை சாத்தியமே என்ற தலைப்பில் நாம் தொடர்ந்து தியானித்து வருகிறோம்.
வெற்றி வாழ்க்கையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் வெற்றி வாழ்க்கையை விரும்பினால்மட்டும் போதாது வெற்றி வாழ்க்கை வாழ்வதற்கு அவசியமானவற்றை நாமும் தேவனோடு இணைந்து செயல்படுத்த வேண்டும். அதைக்குறித்த தேவ வசனம் என்ன சொல்லுகிறது என்பதை கவனிக்கலாம்.