Bread of Life Church India

உயிர்தெழுந்த நாள் கொண்டாடப்படுவது இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே


உலகம் உண்டான நாள் முதல் இதுவரை எத்தனையோ கோடி மக்கள் பிறந்தும், மரித்தும் இருக்கிறார்கள், எத்தனையோ தலைமுறை வந்து சென்றிருக்கிறது. ஆனால் இதுவரை உலக சரித்திரத்தில் மனிதர்கள் பிறந்த நாள் கொண்டாடி கேள்விப்படுகிறோம். இறந்த நாளை நினைவு நாளாக அநுசரிப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் எந்த மனிதனுக்கும் உயிரோடு எழும்பின நாளை கொண்டாடியது இல்லை.

மரணத்துக்கு மரணம் !

 

மரிக்கும்படியாக முதல் மனிதனாகிய ஆதாம் படைக்கப்பட வில்லை. எப்பொழுது ஆதாமும், ஏவாளும் தேவனுடைய வார்த்தையை மீறி செயல்பட ஆரம்பித்தார்களோ, அந்நேரம் முதல் மரணம் மனிதனுக்குள்ளாக பிரவேசிக்க ஆரம்பித்தது.
    மரணம் என்பது, தண்டனைதான், ``தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி; நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.
    ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார் <ஆதி 2:16,17>.
    ``சாகவே சாவாய்'' என்னும் பதம், இரண்டு அர்த்தங்களை குறிக்கின்றவையாக இருக்கிறது.

நான் உனக்குத் துணை நிற்கிறேன்


``உன் தேவனா யிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து; பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன்'' <ஏசாயா 41:13>.
    பிரியமானவர்களே, எனக்கு துணையாக யாரும் இல்லையே, எல்லாம் எனக்கு எதிராகவே இருக்கிறதே என்று, மனம் கலங்கி வேதனையோடு இருக்கும் உங்களைப் பார்த்துதான் கர்த்தர் சொல்லுகிறார் ``நான் உனக்குத் துணை நிற்கிறேன்'' இந்த உலகத்திலே, யாருக்கு செல்வாக்கும், உயர்ந்த பதவியும், அதிகாரமும்  இருக்கிறதோ, அப்படிப்பட்டவர்களின் பின்னால்தான் ஒரு கூட்டம் எப்போதும் துணையாக இருந்து கொண்டே இருக்கும்.